காற்று மாசுபாடு பிரச்சனை நாட்டின் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காட்டுவளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்த பதில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

Advertisment

காற்று மாசுபாடு பிரச்சினை இருக்கிறது உண்மைதான். ஆனால், அது வாழ்நாளைக் குறைக்கும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்வும் சொல்லவில்லை. மேலும் மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரின் இந்த பதிலை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.