Skip to main content

சைபர் தாக்குதலை சீனா நடத்தியதற்கான ஆதாரம் இல்லை - மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

r k singh

 

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கடந்த வருடம் அக்டோபர் 12 ஆம் தேதி, மின்தடை ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் மும்பை முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெர்கார்டட் ஃபியூச்சர், ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனப் பின்னணி கொண்ட 'ரெட் எக்கோ' என்ற குழு, மால்வேர் மூலம் இந்திய மின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகம், இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில், நடைபெற்ற மோதலின் தாக்கமாக இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனவும், மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தது.

 

இதனையடுத்து மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறையின் சைபர் பாதுகாப்புப் பிரிவு, இதுகுறித்து விசாரித்து அம்மாநில அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையைப் பற்றி மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விரைவில், அம்மாநில சட்டப்பேரவையில் பேசவுள்ளார். அந்த அறிக்கையில் சைபர் தாக்குதல் நடைபெற்றதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரெர்கார்டட் ஃபியூச்சரின் ஆய்வறிக்கை குறித்து விளக்கமளித்த மத்திய மின்துறை அமைச்சகம், குறிப்பிட்ட சைபர் தாக்குதலால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியது. அதேநேரத்தில், அமெரிக்க ஊடகம் கிளப்பிய சந்தேகத்தின்படி மும்பையில் சைபர் தாக்குதல் நடைபெற்றதா? அதன் காரணமாக மின்தடை ஏற்பட்டதா? அதன் பின்னணியில் சீனா இருந்ததா என்பது குறித்து மின் அமைச்சகம் குறிப்பிடவில்லை.

 

இந்தநிலையில் இதுதொடர்பாக மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்குடன் பேசியுள்ளார். இதுகுறித்து அனில் தேஷ்முக், சைபர் தாக்குதல் பிரச்சினை மும்பையோடு முடிந்துவிடாது. அது நாடு முழுவதும் பரவக்கூடும். இந்தப் பிரச்சினையை நாம் அரசியலாக்கக்கூடாது. இது குறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் பேசியுள்ளேன். அவர் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், "இரண்டு குழுக்கள் மின்தடை குறித்து விசாரித்தது. ஒரு குழு மின்சார செயலிழப்பு மனித தவறால் ஏற்பட்டது. சைபர் தாக்குதலால் அல்ல என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சைபர் தாக்குதல் நடந்தது என்று இன்னொரு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், அந்த தாக்குதலால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை. நமது வடக்கு மற்றும் தெற்குப் பிராந்திய மையங்களில் சைபர் தாக்குதல்கள் நடந்தன. ஆனால், அவர்களால் (ஹேக்கர்ஸ்) நமது ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடைய முடியவில்லை. மும்பையில் உள்ள தங்களின் மின் அமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடந்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதலை, சீனா அல்லது பாகிஸ்தான் நடத்தியது என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. தாக்குதல்களுக்குப் பின்னால் சீனர்கள் உள்ளார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. சீனா நிச்சயமாக அதை மறுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இந்த சைபர் தாக்குதலில் தொடர்பில்லை என சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.