Skip to main content

“இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை” - பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

"No more use of these words" - Resolution passed in the panchayats

 

அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் அதிகாாிகள் மற்றும் ஊழியா்களைப் பாா்த்து "சாா்" என்றும் "மேடம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளன. அதேபோல் அந்த அதிகாாிகளிடம் கோாிக்கை மனு கொடுக்கும்போதும் மனுவிலும் சாா் என்றும் மேடம் என்றுதான் குறிப்பிடுகிறாா்கள். மேலும், அங்கு பணிபுாியும் ஊழியா்களும் தங்களுக்குள் இந்த வாா்த்தையைத்தான் பயன்படுத்துகிறாா்கள். இது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் தொடா்ந்து நடைமுறையில் மக்கள் பின்பற்றிவருகிறாா்கள்.

 

இந்நிலையில்தான் கேரளாவில் பாலக்காடு மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் நேற்று (02.09.2021) வழக்கத்தில் இருக்கும் "சாா்", "மேடம்" வாா்த்தைகளுக்குப் பதில் "சேட்டன்" (அண்ணன்), "சேச்சி" (அக்கா) என்றோ அல்லது அவா்களின் பெயரையோ, அந்தப் பதவியின் பெயரையோ வைத்து அழைக்க வேண்டும்  என தீா்மானம் போடப்பட்டது. இது கேரளாவில் அனைத்து தரப்பினாிடமும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று, கோட்டயம் உழவூா் பஞ்சாயத்திலும் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உழவூா் பஞ்சாயத்துதான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆா். நாராயணனின் சொந்த பஞ்சாயத்து என்பது குறிப்பிடத்தக்கது.

 

"No more use of these words" - Resolution passed in the panchayats

 

இந்தப் பஞ்சாயத்தின் தலைவராக ஜோணீஸ் பி. ஸ்டீபன் உள்ளாா். இதுகுறித்து மாத்தூா் பஞ்சாயத்து தலைவி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரவிதா முரளிதரன் கூறும்போது, “பிரிட்டிஷ்காரா் காலத்தில் இருந்தும் அவா்கள் விட்டுச் சென்ற பிறகும் சாா், மேடம் என்ற வாா்த்தையை இன்றுவரை பயன்படுத்திவருகிறோம். இதற்கு ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டித்தான் இந்த தீா்மானம் எடுக்கபட்டது. எங்களைப் பொறுத்தவரை இது அடிமை வாா்த்தை. மக்களின் தேவையையும் அவா்களின் உாிமையையும் கொடுப்பதுதான் பஞ்சாயத்தாரும் அதிகாாிகளுக்கும் உள்ள கடமை. பஞ்சாயத்தில் உள்ள மக்களின் உாிமைகள் அனைத்தையும் சேவையாக கருத வேண்டும். இதற்காகத்தான் இந்த தீா்மானத்தைக் கொண்டுவந்தபோது அனைத்து உறுப்பினா்களும் (காங்கிரஸ் - 8, கம்யூனிஸ்ட் - 7, பாஜக - 1) ஒருமனதாக ஆதாித்தனா்.

 

மேலும், அலுவலகத்தில் உாிமையைக் கேட்டு மனு கொடுக்கும்போது 'விண்ணப்ப படிவம்' எனபதற்குப் பதில் 'அவகாச பத்திாிகா' (உாிமை சான்றிதழ்) என மாற்றம் செய்யபட உள்ளது என்றாா். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன் பனச்சிகாடு பஞ்சாயத்தில் அலுவலகத்தில் உாிமை கேட்டு மனு கொடுக்கும்போது பணிவுடன், தாழ்மையுடன் என்ற வாா்த்தைக்குப் பதில் உாிமையுடன் என்ற வாா்த்தையைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தும்போது அந்த உாிமை மனுவை தள்ளுபடி செய்தால் அந்த அதிகாாி மற்றும் ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீா்மானம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேரள சட்டமன்ற சபாநாயகா் ராஜேஷ், மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் கொண்டுவந்த தீா்மானத்தைப் போன்று கேரள சட்டசபையிலும் கொண்டுவர வேண்டுமென்று தனது கருத்தை கூறியுள்ளாா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.