ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் யாரும் கூகுள் ப்ரவுசரை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு கூகுல் க்ரோம் ப்ரவுசர் நம் அன்றாட பயன்பாடுகளில் ஓன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் க்ரோம் ப்ரவுசரை பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது குரோம் ப்ரவுசரை பிரபலப்படுத்தும் நோக்கில் இன்டெர்நெட் இல்லாமல் ஆஃப்லைன் மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இதேபோல், கூகுள் மேப்பை ஆஃப்லைனில் பயன்படுத்தலாம் என்ற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியது.
அதேபோல், தற்போது ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தில் தேவையான தகவல்களை தேடி கொள்ளலாம், தேவையானவற்றை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த புதிய சேவையை முதல்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோம் ஆப்பை அப்டேட் செய்வதன் மூலம் சமீபத்திய பதிப்பை பெற்றுக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இனி கூகுள் பயன்படுத்த இன்டர்நெட் தேவையில்லை..!
சார்ந்த செய்திகள்
Next Story
ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!
உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார்.
கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
தீபாவளிக்கு மக்கள் கூகுளில் தேடியது என்ன?
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார்.
கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை;
1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?
2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?
3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?
4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?
5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?
எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.