Skip to main content

கோவின் செயலியில் இருந்து இந்தியர்களின் தரவுகள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

cowin

 

இந்தியாவில் கோவின் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கோவின் செயலியில் இருந்து சுமார் 20 ஆயிரம் இந்தியர்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, கரோனா பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவை இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் செயலியில் இருந்து தரவுகள் கசியவில்லை எனவும், அனைத்துத் தரவுகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், கோவின் செயலி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனரின் முகவரியையோ, கரோனா பரிசோதனை முடிவையோ சேகரிப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தரவுகள் கசிந்ததாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே, கோவின் செயலியில் ஒரு தொலைபேசி எண் மூலம் இனி ஆறு பேருக்கு தடுப்பூசி முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி சான்றிதழில் பயனருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதனைக் கோவின் செயலியில் உள்ள raise an issue-வில் சென்று மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

இந்தியாவில் வெகுவாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.  நேற்று 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று 1 லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1059 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 814 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 7.98 ஆக உள்ளது.