Advertisment

"வங்கிக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

publive-image

ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், இன்று (10/02/2022) செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022- 2023 ஆம் நிதியாண்டில் 7.8% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ) 10 ஆவது முறையாக மாற்றமில்லை; தற்போது இருக்கும் 4% என்ற நிலையே தொடரும். பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

Advertisment

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆக தொடரும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும். உணவு பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) கணிப்பின்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான்" எனத் தெரிவித்துள்ளார்.

Mumbai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe