ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசு, மாநிலஅரசுகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 678 பேருக்குகரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்சமய விழா, தனிநபர் சார்ந்த விழா என எந்த விழாவாக இருந்தாலும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.