Skip to main content

என்.எல்.சி. அடிக்கல் விழா; “இளைஞர்களுக்கு வேலை..” - பிரதமர் மோடி உறுதி

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
N.L.C. ceremony; "Jobs for the youth..." - Prime Minister Modi assured

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் என்.எல்.சி. இந்தியா தலபிரா அனல் மின் திட்டமான 2400 மெகாவாட் முதல் நிலைத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், டிஸ்லேஸ்வர் துது மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணியை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி செய்கிறது. இந்த அனல் மின் நிலைய திட்டம் ஒடிசாவுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதோடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும். நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்திய நிறுவனத்தின் முன் முயற்சியான மின் திட்டம் நாட்டின் எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது‌.

27 ஆயிரம் கோடிக்கு மேலான முதலீட்டுடன் நிலக்கரி அடிப்படையிலான அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல் பீட் ஹெட் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் எரிசக்தி பாதுகாப்பை வளர்ப்பதற்கும் நாட்டின் வளர்ச்சி பாதையில் செல்வதற்கும் ஒரு மகத்தான படியை குறிக்கிறது. ஆரம்பகட்டத்தில் 2400 மெகாவாட் திறனை உள்ளடக்கிய இந்த திட்டம் இரண்டாம் கட்டத்தில் ரூ 8000 கோடி முதலீட்டில் கூடுதலாக இன்னொரு மெகா திட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இது நாட்டின் மிகப் பெரிய கிரீன் பீல்ட் அனல் மின் நிலையமாக மாற உள்ளது. என்எல்சி தலபிரா அனல் மின் நிலைய அனுமின் திட்டம் சுரங்கத்தின் அருகிலேயே அனல் மின் நிலையங்களை உருவாக்குகிறது. 

அனல் மின் நிலையம் அதன் சமீபத்திய சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புடன் நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்யும். கூடுதலாக இந்த அணுமின் நிலையம் மூலம் ஒடிசா மாநிலம் மற்றும் பிற பயனாளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்கும். மேலும் என்.எல்.சி. இந்திய தலபிரா அனல் மின் திட்டம் வெறும் உட்கட்டமைப்பு முயற்சி மட்டுமல்லாமல் இது சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஒரு உத்தியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. பிராந்தியத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு 1787 கோடி யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளுடன் இத்திட்டம் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கும் தயாராக உள்ளது” என அவர் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.