Skip to main content

வங்கி மோசடி: நிரவ் மோடிக்கு உதவிய சகோதரி...

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து, லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி அவர் தற்போது கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

nirav modi sister helps him in pnb bank fraud

 

இந்நிலையில் நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா தன்னுடைய ‘ஷெல்’ நிறுவனங்களை பயன்படுத்தி 1,201 கோடி ரூபாயை மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பூர்வி மேக்தா துபாய் மற்றும் ஹாங்காங்கில் ஷெல் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொடுக்கப்பட்ட உத்தரவாத கடிதத்தை வைத்து ஆக்ஸிஸ் வங்கியின் ஹாங்காங் கிளையில் 1201 கோடி பெற்றுள்ளார்.

ஒரு வங்கியின் உத்தரவாத கடிதம் இருந்தால் மற்றொரு வங்கியில் கடன் பெறுவோர் தொகையை திரும்ப அளிக்கத் தவறினால் கடன் மற்றும் அதற்குரிய வட்டியை உத்தரவாத கடிதம் அளித்த வாங்கி கொடுக்கும். இப்படி ஒரு கடிதத்தையே பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடிக்கு வழங்கியுள்ளது. இதனை வைத்து கடன் வாங்கினார் என தற்போது அமலாக்கத்துறையினர் பூர்வி மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதில் ஊழியர்களும் தவறு செய்துள்ளனர் என கூறி தனக்கு எதிரான குற்றச்சாட்டை பூர்வி மேக்தா மறுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரவ்மோடி வழக்கறிஞர் லண்டனில் பரபரப்பு வாதம்..! இந்தியா அதிர்ச்சி..!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Neerav Modi's lawyer sensational argument in London

 

மும்பையைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றார். அதனைக் கட்டத் தவறியதால் அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இவர் மீது தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லண்டனுக்குத் தப்பிச் சென்றார் நீரவ் மோடி. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவரும் நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார் நீரவ் மோடி.

 

அவரை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக, லண்டன் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது இந்திய அரசு. இதனையடுத்து ஒரு கட்டத்தில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த,  பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது பிரிட்டன் அரசு.

 

அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீரவ் மோடி. அது தள்ளுபடியான நிலையில் மீண்டும் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று (21.07.2021) லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீரவ் மோடி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், “நீரவ் மோடி தற்போது மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். தன்னுடைய நிலையை உணராதவராகவும் இருக்கிறார். அதனால் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மனநீதியாக பெரிய பாதிப்புகள் அவருக்கு ஏற்படலாம். அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு நாடு கடத்துவதிலிருந்து அவருக்கு விலக்கு வேண்டும்’’ என்று வாதிட்டுள்ளார்.

 

நீரவ் மோடி வழக்கறிஞரின் இத்தகைய வாதத்தை ஏற்க மறுத்து இந்திய அரசின் சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் என சொல்லப்பட்ட வாதத்தில் அதிர்ச்சியடைந்துள்ளது இந்திய அரசு.

 

 

Next Story

வங்கிகளின் பெயருக்கு மாற்றப்பட்ட சொத்துக்கள்; சுருட்டியது ரூ. 22,500 கோடி... மீட்கப்பட்டது எவ்வளவு..?

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

mallaya modi choksi

 

இந்திய வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த பணக்காரர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.  இவர்களைப் போன்றே பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி, டொமினிக்கா தீவில் சிறையில் உள்ளார்.

 

இந்த மூன்று பணக்காரர்களுக்கும் எதிராக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களை இந்தியாவிற்கு கொண்டு  வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மூவரும் மொத்தமாக 22,586 கோடி வங்கிகளில் மோசடி செய்துள்ளனர்.

 

இந்நிலையில், அமலாக்கத்துறை விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 18,170.02 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளதோடு, 9371.17 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கடன் வழங்கிய வங்கிகளின் பெயர்களுக்கு மாற்றியுள்ளது. அமலாக்கத்துறை மொத்தமாக முடக்கியுள்ள சொத்துக்களின் மதிப்பான  18,170.02 கோடி ரூபாய் என்பது வங்கிகள் இழந்த தொகையில் 80.45 சதவீதமாகும். தற்போது வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ள 9371.17 கோடி ரூபாய்  என்பது வங்கிகள் இழந்த தொகையில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.