கேரளாவில் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

kjl

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் 29 ஆயிரத்தை கடந்து கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்படும் கரோனா தினசரி பாதிப்பில் 70 சதவீதத்துக்கு அதிகமான தொற்று கேரளாவில் மட்டுமே பதிவாகிறது. இந்நிலையில், கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கேரளாவில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

corona virus lockdown
இதையும் படியுங்கள்
Subscribe