Skip to main content

''இந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது''-மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் எம்.பி திருச்சி சிவா பேட்டி!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

 '' This news has brought happiness '' - Trichy Siva MP interview after meeting the Union Minister!

 

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் 3 எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட குழுவை உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு அனுப்பி தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன்  திமுக எம்.பி திருச்சி  சிவா உள்ளிட்ட 10 பேர் கொண்ட தமிழக சிறப்பு குழு சந்திப்பு மேற்கொண்டு உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரியது. இதுவரை தமிழகத்தை சேர்ந்த 777 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களையும் விரைந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகத்தின் சிறப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

 

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி திருச்சி சிவா, ''அங்கிருந்து வெளியே வருவதற்கு இரண்டு மார்க்கங்கள் இருக்கிறது. பேருந்தில் வர 500 டாலர், ரயிலில் வருவதென்றால் இலவசம். ரயில் உள்நாட்டு மக்களுக்காகஇயக்கப்படுகின்ற காரணத்தால் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் மட்டும்தான் அதில் செல்ல முடியும். இதனால் இந்திய மாணவர்கள் எந்த பாகுபாடும் பார்க்காமல் யார் முதல் 20 பேர் இரண்டாம் 20 பேர் என முடிவெடுத்து மிக ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல் விமானத்திலும் அனைத்து மாநில மாணவர்களும் பாகுபாடின்றி அழைத்து வரப்படுகிறார்கள். மாணவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மீட்கப்படுவதில் மொழிப் பாகுபாடு இருப்பதாகப் புகார்கள் இருந்த நிலையில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.