இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

New governors appointed for two states

ஒடிசா, திரிபுரா என இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஆவார். மேலும் திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திரா சேனா ரெட்டி நல்லு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

governor President tripura
இதையும் படியுங்கள்
Subscribe