Skip to main content

டன் கணக்கில் தங்கம் எல்லாம் இல்லை கிலோ கணக்கில் உறுதியாம்..!

Published on 22/02/2020 | Edited on 24/02/2020

உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான சம்பவம் உண்மையில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  இரண்டு தினங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் சோன்பத்ரா பகுதியில் 3350 டன் எடை கொண்ட தங்க சுரங்கங்கள் இருப்பதை அம்மாநில தொல் பொருள்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர் எனவும் மேலும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் 2700 டன் தங்கமும், ஹார்டீ என்ற இடத்தில் 650 டன் அளவுக்கு தங்கமும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் பரவியது.



மேலும் சுரங்கத்தில் உள்ள தங்கம் முழுவதையும் வெட்டி எடுத்தால் இந்திய நாட்டின் தங்கத்தின் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் முழுவதும் தவறானது என்று தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சோன்பத்ரா பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் அவரின் கோட்டைக்கு இருபுறமும் தங்கத்தை புதைத்து வைத்திருந்ததாகவும், அந்த தங்கத்தின் சிறு பகுதியே தற்போது கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டன் கணக்கில் தங்கம் என்பதெல்லாம் தவறான தகவல் என்றும் அவர் கூறியுள்ளார். 100 முதல் 200 கிலோ வரை தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.