Skip to main content

சீராகக் குறையத் தொடங்கிய கரோனா பாதிப்பு - புதிதாக 2,81,386 பேர் பாதிப்பு!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
j

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்து வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 33 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.

 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,106 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 3,78,741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை  2.11 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 35 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்