Skip to main content

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

dgf

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்க காலங்களில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 137 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து 14,808 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்