dgf

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்க காலங்களில்அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 137 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகஉயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து 14,808 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.