Skip to main content

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி; விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 Netizens are criticizing video PM Modi giving way ambulance

 

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, ஹிமாச்சல் பிரதேசத்திலும் பிரதமர் மோடி ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது.

 

இமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் பாஜக பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது.

 

புதன்கிழமையன்று இமாச்சல் பிரதேச பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். இதனையடுத்து காங்ரா மாவட்டத்தில் உள்ள சாம்பி கிராமத்துக்கு வந்த மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது பிரதமர் செல்லும் காரின் வழியே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் கான்வாய் வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடியின் இச்செயலுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 

அந்த ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பிறகு பிரதமரின் கான்வாய் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. ஆனால், இது முதன்முறை அல்ல கடந்த மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட குஜராத் பயணத்திலும் இதேபோல் ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் தனது வாகனத்தை நிறுத்தினார். இதைக் குறிப்பிட்டு பேசிய எதிர்க்கட்சியினர்  “இந்த மாதிரி செயல்களை தேர்தல் யுக்திகளாகவே பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார்” என விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.