union health minister

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததால், முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்

Advertisment

இதன்பிறகு கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அதிக அளவு மருத்துவர்களை ஈடுபடச் செய்யும் விதமாக முதுகலை நீட் தேர்வு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. மேலும், கரோனா தொடர்பான பணிகளில் 100 நாட்கள் ஈடுபடும் மாணவர்களுக்கு, இனி அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

Advertisment

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். ஏற்கனவே, இளங்கலை நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.