'NEET' exam started across the country

Advertisment

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு இன்று தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ் மொழியில் 31,803 பேர் என தமிழகத்திலிருந்து மொத்தம் 1,42,286 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை மொத்தமாக 18.72 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதில் 10, 64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வானது மாலை 5.20 மணிக்கு நிறைவடைகிறது.