n

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 4ஆம் தேதி (04.05.2025) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் தேர்வர்கள் எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வைஎழுதியுள்ளனர்.

Advertisment

இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற்றது. மொத்தம் 180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

Advertisment