நீட் தேர்வு நடக்கும் இடங்கள் அதிகரிப்பு!

neet  exam for medical course study union education minister officially announced

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "செப்டம்பர் 12- ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறும். நாளை (13/07/2021) மாலை 05.00 மணி முதல் nta.ac.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு விண்ணப்பத்தைப் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155- லிருந்து 198- ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இருந்த 3,862 தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்படும். கரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Announcement neet exam union education minister union minister dharmendra pradhan
இதையும் படியுங்கள்
Subscribe