Skip to main content

"இனி இவ்வாறு செய்தால், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - நவீன் பட்நாயக்...

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால்  தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். .

 

 

 

 

 

naveen patnaik about health workers safety

 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 18,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சுகாதார பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் இந்தச் செயல்களைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

அதன்படி, சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் (தனியார் மற்றும் பொது) குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்படுவதை இந்திய அரசின் முயற்சியுடன் மாநில அரசு ஒருங்கிணைக்கும்.
 

http://onelink.to/nknapp


அரசு அவர்களைத் தியாகிகளாகக் கருதி, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் இணையற்ற தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கப்படும். அவர்களுக்கு எதிரான எந்தவொரு செயலும் அரசுக்கு எதிரான செயலாகவே கருதப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராகவோ, அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ யாரேனும் நடந்துகொண்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் உட்பட, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. கூட்டணி முயற்சி தோல்வி; வெளியான பரபரப்பு தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP Coalition efforts fail Exciting information released
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

BJP Coalition efforts fail Exciting information released
பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி

இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பைப் பின்பற்றும் ஒடிசா அரசு!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Odisha government following CM MK Stalin announcement

தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தைப் போலவே ஒடிசாவிலும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பின் மூலம் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை கௌரவிப்பதே மாநில அரசின் முக்கிய நோக்கம் என்றும் முதல்வர் நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.