நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெறுகிறது. இதற்காக மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நீட் தேர்வை (NEET - NATIONAL ELIGIBLITY CUM ENTRANCE TEST "2019") நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்கு சுமார் 15,19,375 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஆனால் 14,10,754 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தேர்வை முதன் முறையாக "தேசிய தேர்வு முகமை" (NATIONAL TESTING AGENCY) நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதியும், 20 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என நீட் தேர்வை நடத்திய தேசிய முகமை தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான இணைய தள முகவரி: https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx சென்று தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.