இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250- க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIA2.jpg)
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை (NATIONAL INVESTIGATION AGENCY- "NIA" அதிகாரிகள் கோவை, நாகை, தஞ்சை, மதுரை, பெரம்பலூர், தேனி, திருவாரூர் என பல இடங்களில் சோதனை மேற்கொண்டு பலரை 16 பேரை கைது செய்தனர்.பின்னர் கைதானவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் எடுத்தது விசாரித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIA_0.jpg)
இந்த நிலையில் காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
Follow Us