ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட உபகரணத்தை தனது டீசல் கார்களில் பொருத்திய விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர், தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.