ADVERTISEMENT

டெல்லியில் தேசிய பொது பயண அட்டை- இன்று தொடக்கம்!

09:41 AM Dec 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

டெல்லியில் தேசிய பொது பயண அட்டையின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/12/2020) தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

இந்த பயண அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயிலிலும், பஸ்களிலும் பயணிக்கலாம். மேலும் சுங்கச்சாவடி- வாகன நிறுத்துமிட கட்டணம் மற்றும் சில்லரை வர்த்தக்கத்துக்கும் பொது பயண அட்டையைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/12/2020) தொடங்கி வைக்கிறார். மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் கார்டன் வரை சுமார் 38 கி.மீ. தூரத்துக்கு ஓட்டுநரின்றி மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT