Skip to main content

'தனது தகுதியான மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டது'- பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

 'The nation has lost one of its deserving sons' - Leaders mourn Pranab Mukherjee

 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களாகவே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் தினமும் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 13 -ஆவது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலைையில் அவர் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில். தனது தகுதியான மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத முத்திரை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தவர் பிரணாப் முகர்ஜி என உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை நாடு முழுவதற்கும் பெருமை சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் எனக் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும், பிரணாப் முகர்ஜியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டை முன் நிறுத்தியவர் பிரணாப் முகர்ஜி என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

Ad

 


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சிறப்பான முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் பிரணாப் முகர்ஜி எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.