Skip to main content

இந்த சேவையை நாங்கள் தொடருவோம்! - நெகிழ்ச்சியில் நரேந்திர மோடி

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

பா.ஜ.க. ஆட்சிபொறுப்பேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் முடிகின்றது. இதை ஒருபக்கம் பா.ஜ.க. தலைவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், எதிர்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நான்கு வருட முடிவு குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


 

modi


 

 

 

“எங்கள் அரசாங்கத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கும் குடிமக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த முழு அரசாங்கத்திற்கும் உத்வேகமாகவும், மூலதனமாகவும் இருந்தது உங்கள் உறுதுணையும், அன்பும்தான். நாங்கள் இந்திய மக்களுக்கு இதே வேகத்திலும், அர்ப்பணிப்புணர்வோடும் சேவையாற்றுவோம்..

2014ன் இதே நாளில்தான் இந்தியாவின் மாற்றத்திற்காக நாங்கள் எங்கள் பணியை தொடங்கினோம்.

 

 

இந்த நான்கு வருடங்களில் வளர்ச்சி என்பது வெகுஜன மக்களின் பேரியக்கமாக மாறியது, ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்குபெற்றுள்ளான். 125 கோடி இந்தியர்களும் இந்தியாவை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்."

 

 

சார்ந்த செய்திகள்