மக்களவைத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

Advertisment

n modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

“மம்தா பானர்ஜி மண், மக்கள், மாநிலம் என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு வங்கதேச நடிகர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். வெளிநாட்டவர்களை வைத்து பிரச்சாரம் செய்ய இவர்கள் வெட்கபடுவதில்லை.

மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த விவரங்கள் எல்லாம் வந்த பிறகு, மம்தா பானர்ஜி தூக்கம் இன்றி தவித்து வருகிறார். பாஜகவுடைய வெற்றியை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

Advertisment

வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கத்திற்கு ஊடுருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய பாஜக அரசு தீவிரப்படுத்தும்” என்று கூறினார்.