Skip to main content

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக போராடுவோம்- மத்திய அரசுக்கு நாராயணசாமி பதிலடி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, “ நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக வைத்திலிங்கம் எம்.பி. கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று கூறியுள்ளார். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பாக மத்திய அரசு உள்ளது. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 

n

 

அதற்கு அரசு கொறடா அனந்தராமன், “ இதற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டும’ என்றார். மீண்டும் அன்பழகன், “ இதேநிலை நீடித்தால் புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறையாகவே இருக்க நேரிடும். நாம் மாநில அந்தஸ்தை பெறவேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 

இவற்றிற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை மந்திரி அந்த பதிலை அளித்துள்ளார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று உள்துறை மந்திரி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தினோம். அப்படி இருந்தும் மத்திய அரசு புதுவை மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய மந்திரியின் பதில் வருத்தத்தை அளிக்கிறது. இருந்தபோதிலும் மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்” என்றார். 

 

p

 

இதேபோல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை  நாராயணசாமி கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க உறுப்பினர்கள், சுவாமிநாதன், சங்கர் ஆகியோர், “ ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி கூற வேண்டும். திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் திட்டத்தை நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம்’ என்றனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அனந்தராமன் தனவேலு, பாலன், விஜயவேணி, என்.ஆர்.காங்கிரஸ் சந்திரபிரியங்கா, தி.மு.க உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன், அ.தி.மு.க உறுப்பினர்கள் அன்பழகன், அசனா ஆகியோர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கும், மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கும்” என்றனர்.  

 

இவற்றிற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதியில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சட்டமன்ற கூட்டம் நடந்து வந்தபோது அமைச்சர் கமலக்கண்ணன் பிரச்சினை எழுப்பினார். அப்போது புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதிக்காது என்று தெளிவாக கூறி இருந்தேன். ஆனால் தற்போது அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அனுமதி கோரி நமக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. 

 

அந்த கோப்பை நான் அமைச்சர் கந்தசாமிக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதை பார்த்து விட்டு புதுவையில் எங்கள் அரசு அனுமதி வழங்காது என்று என்னிடம் திருப்பி அனுப்பினார். அதனை வைத்து நான் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். புதுவை மாநிலம் சிறிய பகுதி. இங்கு பேசும் உறுப்பினர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேட்கின்றனர். அதனை நான் எனது தீர்மானத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

 

விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நீர்மட்டம் கீழே சென்று விடும். தண்ணீர் மாசு ஏற்படும். காற்றில் நச்சு தன்மை கலக்கும். ஒட்டு மொத்தமாக பாதிப்பு ஏற்படும். எனவே புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் எழுதினேன். பெட்ரோலிய துறை மந்திரி இதனை பரிசீலனை செய்வதாக எனக்கு பதில் அனுப்பியுள்ளார். மக்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம். பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். திட்டத்தால் பாறைகள் உடையும். பூகம்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம்” என்றார். 

 

இதனை தொடர்ந்து அந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் சிவக்கொழுந்து குரல் வாக்கெடுப்பு நடத்த அனுமதித்தார். இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் -நாராயணசாமி உத்தரவு! 

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அங்குள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக் கவசம் வழங்கினார். வியாபாரிகளிடம் சமூக இடைவெளிவிட்டு பொருட்கள் வியாபாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
 

narayanasamy


 


அதனைத்தொடர்ந்து  புவன்கரே வீதியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டை ஆய்வு செய்து, அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களுக்கு முகக்வசம் அளித்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மூலகுளம் சந்திப்பு,  மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாகவும்  காவல்துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி,  அங்குள்ள காவலர்களுக்கும் முகக் கவசம் வழங்கி ஆலோசனை நடத்தினார். 
 

narayanasamy


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று கரோனோ தொற்றால் பாதித்த ஒருவருக்கு தொற்று இல்லை என்பதால் வீட்டிற்கு அனுப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 பேர் குணமடைந்ததால் 3 பேர் மட்டுமே தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

narayanasamy

 

http://onelink.to/nknapp


புதுச்சேரியைத் தவிர மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதிகளில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது புதுச்சேரியில் 1001 பேரும், காரைக்கால் பகுதியில் 1034 பேரும், மாஹே பகுதியில் 102 பேர் , ஏனாம் பகுதியில் 478 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3025 பேர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் புதுச்சேரியில் தொற்று குறைந்து வருவது தெரிகின்றது. 

புதுச்சேரியில் அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, மூலக்குளம், திருபுவனை, காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவர் குணமானாலும் அந்தப்பகுதி 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் படவேண்டும் என்று மத்திய அரசு அறிவுத்தியுள்ளதால் அதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

 

 

narayanasamy



20.04.2020 திங்கள்கிழமையில் இருந்து பல துறைகளுக்கு மத்திய அரசு விதிவிலக்கு அறிவித்துள்ளது. விவசாயம், உரைக்கடைகள், விதை கடைகள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விளைப்பொருட்களை ஏற்றிச் செல்லத் தடையில்லை. கட்டுமானப் பணிகள், சாலை அமைப்புகளுக்கு அனுமதி உண்டு. மின்சாதனம் பழுதுபார்ப்போர், கொல்லர்கள், தச்சு வேலை செய்ப்பவர்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மீன்பிடித் தொழிலுக்கு தடைகாலம் இருந்தாலும் மத்திய அரசு அனுமதி அளித்து சலுகை அளித்துள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும், சானிடைசர்  உபயோகிக்க வேண்டும். 

 

வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வரக்கூடாது. தொழிற்சாலைகள் ஊழியர்களை அருகில் வைத்து பராமரிக்க வேண்டும், விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.  அத்தகைய தொழிற்சாலைகள் மூடப்படும். ஏப்ரல் 20 முதல் 33 சதவீத ஊழியர்கள் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு பணியாற்றவேண்டும்.  
 

ஹோட்டல்கள் தொடர்ந்து செயல்படலாம். இருந்தபோதும் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி இல்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும். கரோனா தடுப்பில் இந்திய அளவில் புதுச்சேரி இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Next Story

நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள படம் "மிக மிக அவசரம்". நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. 
 

miga miga avasaram

 

 

பெண் காவலர்களுக்கு பணியில் நேரும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். பெண்கள்படும் சிரமத்தை அப்படியே நமக்கு வெளி காட்டிய நடிகையின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ, இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். 

அதேபோல இந்த படத்தை பார்த்த புதுச்சேரி முதலைமைச்சர் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, நடிகை ஸ்ரீபிரியங்காவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.