narasimha reddy andhra

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நரசிம்மரெட்டி, தனக்கு பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து 34 ஆண்டுகளாக உதவியாளராகவே பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இவர் மீது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது.

narasimha reddy andhra

Advertisment

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன.

narasimha reddy andhra

Advertisment

ரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளார். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்துக்கள் இவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் அவரது மனைவி ஹரிபிரியா மற்றும் அவரது தாயார் நாராயணம்மா பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. சாதாரண பியூனுக்கு இவ்வளவு சொத்து வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.