Advertisment

"சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்"- பிரதமர் நரேந்திர மோடி உரை! 

publive-image

Advertisment

'மன் கி பாத்' என்ற அகில இந்தியவானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (25/09/2022) காலை 11.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு, சண்டிகர் விமான நிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும் போது, சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் வரும் செப்டம்பர் 28- ஆம் தேதியைக் கொண்டாட வேண்டும். சீட்டா ரக சிறுத்தைகளுக்கு அனைத்து மக்களும் பெயர்களைப் பரிந்துரைக்கலாம். துல்லிய தாக்குதல் நடத்திய செப்டம்பர் 28- ஆம் தேதி அன்று நமது ராணுவத்தின் வீரத்தை நினைவுக் கூற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe