nadda about shivsena

மஹாராஷ்ட்ர முதல்வரின் தோல்வியை பாஜக தொழில்நுட்ப பிரிவினர் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisment

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா, மத்திய அரசின் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக சிவசேனாவின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் நட்டா.

Advertisment

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "மகாராஷ்ட்ர அரசின் சுயநலத்தையும், அவர்களின் உண்மையான நோக்கத்தையும் அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அங்கு வெட்கங்கெட்ட ஆட்சி நடக்கிறது. கூட்டணிக்குள் சண்டையும், உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது. அரசு பல விஷயங்களில் தோல்வி அடைந்து வருகிறது. முதல்வர் மற்றும் அரசின் இந்த படுதோல்வியை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.