Skip to main content

“மகன் உயிரோடு வரப்போவதில்லை... ஆனால் கொலைகாரன் யாருன்னு தெரிச்சிக்கணும்” - போராடும் தந்தை 

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Mystery continues in Adil Mohammad case of Kerala state

 

கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த நஜீம்-சுஜிதா தம்பதியினரின் மகனான ஆதில் முகம்மது கடந்த மே 6 ஆம் தேதி பயங்கர வெட்டுக் காயத்துடன் கொல்லப்பட்டு குளத்தில் மிதந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளி யாரென்ற மர்மம் தொடர்கிறது.  

 

ஆதில் முகம்மதுவின் தாய்மாமன் சுனில் கூறுகையில், "மே 6-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த ஆதில் முகம்மதுவை, அஸீஸ்தான் விளையாட அழைத்துச் சென்றான். மாலை 5.30 மணிக்கு அஸீஸ் மட்டும் தனியா நடந்து வந்தான். ஆதில் முகம்மது எங்கேன்னு கேட்டபோது திருதிருன்னு முழிச்சிட்டு முன்னுக்குப் பின் முரணா பேசினான். 'மொபைல் கேம் ப்ரண்ட் ஒருத்தனோடு ஆதில் போனான்' என்றும் 'இறச்சகுளத்தில் ஒரு கோவிலில் சாமியாட்டம் பார்க்கப் போனான்' என மாற்றி மாற்றிப் பேசினான். ஆதில் பிணமாக மீட்கப்பட்ட பிறகு போலீஸ் விசாரணையில், "குளத்தின் அருகில் உட்கார்ந்து இருவரும் மாங்காய் தின்னோம். மிளகுப் பொடி ஆதிலின் பனியனில் பட்டதால் அதைக் கழுவ குளத்துக்குச் சென்றான். மீன் வளர்க்க முட்டை பாசி எடுக்க குளத்துக்கு போனான்...' என்றும் முரணாகக் கூறினான். ஆதிலின் செருப்பு குறித்தும் முரண்பாடாகப் பேசினான். ஆதிலின் பாடி கிடைத்தபோது துபாயிலிருந்து வந்த அஸீஸின் தந்தையோ திருவிதாங்கோட்டில் முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமான உறவினரின் வீட்டில் மட்டும் இரு நாட்கள் இருந்துவிட்டுச் சென்றார்'' என்றார். 

 

ஆதில் முகம்மதுவின் தந்தையும் கேரளா காங்கிரசின் முக்கிய பிரமுகருமான நஜீம் நம்மிடம், "போலீசாரின் விசாரணை திருப்தியில்லாததால் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சதீஷன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். முதல்வர் பினராய் விஜயனையும் நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் விசாரணையில் ஒரு சதவிகிதம்கூட முன்னேற்றமில்லை. இதனால் மீண்டும் முதல்வர் பினராய் விஜயனின் செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனிடம் முறையிட்ட பின், சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டது. எனினும் இதுவரை குற்றவாளியைக் கண்டறியவில்லை. இன்னும் எஃப்.ஐ.ஆர். கூட பதியவில்லை. என் மகன் இனி உயிரோடு வரப்போறதில்லை என்றாலும் யார் கொலைகாரன்னு தெரிஞ்சுக்கத்தான் போராடுறோம்'' என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.