Skip to main content

“இந்த மையம் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

"My wish is that this center should be empty" -Tamilisai Saundarajan interview

 

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்துவைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “புதுச்சேரியில் தற்போது நடைபெற்றுவரும் தடுப்பூசி திருவிழா மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது. கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் 44,412 பேர் தடுப்பு செலுத்திக்கொண்டுள்ளனர். இது ஊக்கமளிப்பதாக இருக்கிறது.  இதனை மேலும் அதிகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

முதல்வர் தன்னையே ஒரு முன்னுதாரணமாக காண்பித்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதுச்சேரி மாநிலத்தை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முயற்சியில், 'உயிர்க்காற்று' திட்டம் மூலமாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தக் கோவிட் பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போதுமான அளவில் ஆக்சிஜன் படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள் கொண்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த மையம் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். குழந்தைகளுக்கான கரோனை சிறப்பு சிகிச்சை பிரிவும் தயார் நிலையில் இருக்கிறது.

 

"My wish is that this center should be empty" -Tamilisai Saundarajan interview

 

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் தாக்கும் என்பதில்லை. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடவில்லை. ஒருவேளை நோய்த் தொற்றால் குழந்தைகள் தாக்கப்பட்டால் அதற்கும் தயாராக இருக்கிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போதிய அளவு மருந்து கையிருப்பில் இருக்கிறது. பிரதமரின் 'ஆயுஷ்மான்' பாரத் காப்பீட்டு திட்டத்தை மிக விரைவில் புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வழங்குவதற்கான முயற்சி நடைபெற்றுவருகிறது. பிரதமரின் காப்பீட்டு திட்டம் மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது. உலகம் முழுவதும் அதிக மக்கள் தொகையால் பயன்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டமாக இது இருக்கிறது. அதிகப்படியான நோய்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.  

 

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘ஆயுஷ்மான்’ பாரத் காப்பீடு அட்டை பதிவுசெய்யும் மையத்தை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டு, அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் கீழ் 1.90 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். தற்போது 60,320 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் 1,77,366 பேர் பயனடைந்திருப்பதாகவும், மேலும் விடுபட்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்தப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கான அரிசி மற்றும் உதவித் தொகையை மாணவிகளுக்கு தமிழிசை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.