Muralidhar becomes Chief Justice of Madras High Court- Supreme Court Collegium Decision

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

சென்னையில் பிரபல வழக்கறிஞராக இருந்து பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் முரளிதர். உச்சநீதிமன்றம் அவரை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து தற்பொழுது அவர் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தலை ராஜஸ்தான் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.