Skip to main content

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று எப்படி இருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

mumbai stock market nifty, sensex


கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான ஜூன் 12- ஆம் தேதி, தேசிய பங்குச்சந்தையும் (நிப்டி), மும்பை பங்குச்சந்தையும் (சென்செக்ஸ்) சரிவிலிருந்து ஓரளவு எழுச்சியுடன் முடிவடைந்தன. எனினும், நடப்பு வாரத்தில் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களைப் பொருத்தே இந்தியப் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் அமையும் என்பதோடு, இனி வரும் காலங்களிலும் சந்தையில் நிலையற்ற தன்மையே காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 


நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 15), நிப்டி இண்டெக்ஸ் 10,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நம்பிக்கையான அம்சம்தான் என்கிறார்கள்.

''கடந்த வெள்ளியன்று நிப்டியில் துவக்கநிலை வர்த்தகமே குறைந்தபட்சமாக 9544 புள்ளிகளில் தொடங்கியது. இந்த வாரத்தில் நிப்டி இண்டெக்ஸ் 10328 புள்ளிகள் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு குறுகிய கால ஆதாயம் எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும்,'' என்கிறது ஷேர்கான் பங்குத்தரகு நிறுவனம். 

கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறும் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம், நடப்பு வாரத்தில் சராசரியாக 10100 புள்ளிகளில் நிப்டி வர்த்தகம் ஆகும் என்கிறது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குசந்தைகளும் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு வந்தன. அதன் தாக்கம்தான் இந்திய பங்குச்சந்தைகளிலும் அன்றைய தினம் எதிரொலித்தன. அதனால்தான் அன்று ஆரம்பத்தில் சரிவில் இருந்த நிப்டி மற்றும் சென்செக்ஸ், முதல் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல ஏற்றம் கண்டதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், ஒரு வார கால அடிப்படையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து விற்பனை செய்யும் திட்டத்தில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவ்வளவு லாபகரமானதாக இருக்காது என்றும் எச்சரிக்கின்றனர். அன்றாட நடவடிக்கைகளை அனுசரித்து வர்த்தகத்தில் ஈடுபடுவதே இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக இருக்கும்.

கடந்த வெள்ளியன்று குறிப்பிட்ட சில பங்குகள் மீது முதலீட்டாளர்களின் அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ திக்விஜய், ஜூபிலன்ட் புட் ஒர்க்ஸ், எல்பிசிஏ லேபாரட்டரீஸ், கோகுல் ரீபாய்ல்ஸ் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர்.
 

 

 

mumbai stock market nifty, sensex


கரடியின் பிடியில் உள்ள பங்குகள்: 

சந்தையின் நிலையற்றத் தன்மை காரணாக இதற்கு முன் ஆதாயம் அளித்த பல முக்கிய பங்குகள் தற்போது கரடியின் பிடியில் சிக்கி இறக்கத்தில் இருக்கின்றன. 

அந்த வகையில், ஐடிசி, செயில், அதானி பவர், இன்போசிஸ், ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ், அரபிந்தோ பார்மா, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், லூபின், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், மிஸ்ரா தாட்டு நிகாம், இண்டியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், என்ஐஐடி லிமிடெட், ராம்கோ சிமெண்ட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல், டிக்ஸான் டெக்னாலஜீஸ், வி&கார்டு, ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்திக்கக் கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

அதிக கவனம் பெற்ற பங்குகள்:

அதேபோல், நிப்டியில் கடந்த வாரம் குறிப்பிட்ட பல பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். பஜாஜ் பைனான்ஸ் (ரூ.3960 கோடி), இண்டஸ் இந்த் வங்கி (ரூ.2911 கோடி), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.2760 கோடி), ஹெச்டிஎப்சி (ரூ.2045 கோடி), ஆக்சிஸ் வங்கி (ரூ.1918 கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.1618 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.1592 கோடி), வோடபோன் ஐடியா (ரூ.1410 கோடி), ஆர்பிஎல் வங்கி (ரூ.1328 கோடி), கோடக் வங்கி (ரூ.1133 கோடி) ஆகிய பங்குகள் கடந்த வாரம் தலால் தெருவில் முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து இருந்தன.

எண்ணிக்கை அளவில் அதிக முதலீடு பெற்ற பங்குகள்:
அளவு அடிப்படையில் சில குறிப்பிட்ட பங்குகளில் முதலீட்டாளர்கள் கடந்த வாரம் அதிகளவில் கவனம் செலுத்தினர். அதாவது, வாங்கியது, விற்றது இரண்டும் இவற்றில் அடங்கும்.

அதன்படி, வோடபோன் ஐடியா (150 கோடி பங்குகள்), டாடா மோட்டார்ஸ் (9.29 கோடி பங்குகள்), பாரத ஸ்டேட் வங்கி (9.27 கோடி பங்குகள்), ஆர்பிஎல் வங்கி (8.35 கோடி பங்குகள்), பெல் (7.30 கோடி), ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி (7.10 கோடி), இண்டஸ் இந்த் வங்கி (5.74 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கி (5.16 கோடி), பெடரல் வங்கி (5 கோடி), அசோஷ் லேலண்ட் (4.81 கோடி) ஆகிய பங்குகள் அதிகளவில் வர்த்தகம் ஆயின.

ஆர்வம் உள்ள பங்குகள்:

முதலீட்டாளர்கள் நீண்டகாலப் போக்கில் வாங்குவதற்கு சில பங்குகளில் ஆர்வம் காட்டுகின்றனர். கிரானியுல்ஸ் இண்டியா, நெட்வொர்க்18 மீடியா,ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், ஆலோக் இண்டஸ்ட்ரீஸ், வைபவ் குளோபல் ஆகிய பங்குகள் கடந்த 52 வார உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அதனால் இப்பங்குகளில் முதலீட்டாளர்கள் மேலும் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.
 

http://onelink.to/nknapp


அதேநேரம் ஐஎல் அண்டு எப்எஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலைக்குச் சென்றதால் இப்போதைக்கு அப்பங்குகளை விற்று விடுவதே நட்டத்தில் இருந்து மீள வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

என்றாலும், ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில், கடந்த வார இறுதியில் நிப்டி&500ல் 235 பங்குகள் ஆதாயத்திலும், 259 பங்குகள் சரிவிலும் இருந்தது நல்ல அறிகுறிகள் என்று சொல்ல முடியாது என்றே கணிக்கின்றன பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள்.

ஆகையால், மேலே சொல்லப்பட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு நடப்பு வாரத்தில் செயல்படலாம் என்றும் சொல்கிறார்கள் நிபுணர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.