Skip to main content

தாயை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சடலத்துடன் வசித்த இளம்பெண்

 

mumbai lalbaug young woman and her mother incident 

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை லால்பாக்கில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 55 வயது தாயாருடன் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு சில மாதங்களாக தாயாரின் சகோதரர், அதாவது அப்பெண்ணின் மாமா தனது சகோதரியைச் சந்திக்க பலமுறை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது எல்லாம் அம்மா வீட்டில் இல்லை என தனது மாமாவை அப்பெண் வீட்டில் இருந்து அனுப்பி வைத்துள்ளார்.

 

வழக்கம்போல் நேற்று முன்தினம் தாயின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சந்தேகமடைந்த தாயின் சகோதரர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரிப்பதற்காக போலீசார் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது தனது தாயார் வீட்டில் உறங்கிக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணின் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டின் படுக்கை அறையில் இருந்த அலமாரியில் இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து அதனை சோதனை செய்தபோது தாயாரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. மேலும் தண்ணீர் தொட்டியில் மேலும் சில பாகங்கள் இருந்தன.

 

இதுகுறித்து போலீஸ் தெரிவிக்கையில், "மகள் தான் தனது தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்துள்ளார். மேலும் தனது தாயின் சடலத்துடன் 3 மாதங்களாக வசித்தும் வந்துள்ளார்" எனத் தெரிவித்தனர். மேலும் எதற்காக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !