இந்தியப்பங்குச்சந்தைகள் இன்று கடுமையானவீழ்ச்சியைச்சந்தித்த நிலையில், இன்று மதிய நிலவரப்படிரிலையன்ஸ்நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் வரைசரிந்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனாவைரஸ்தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலையும் இன்றுசர்வதேசச்சந்தையில் 30% சரிந்தது. இந்நிலையில், இந்தியபங்குச்சந்தை2009 ஆம்ஆண்டுக்குப்பின்னர் இன்று ஒரே நாளில் மிகப்பெரியசரிவைச்சந்தித்துள்ளது. இன்று மட்டும்நிப்டிமதிப்பு 6.08 சதவீதம் குறைந்தது. மேலும் நிப்டி பங்கு ஒன்றின் விலை 10,294 வரை சரிந்தது. இதுவே கடந்த 17 மாதங்களில்நிப்டியின்குறைந்தபட்ச மதிப்பாகும். அதேபோல மும்பைபங்குச்சந்தையும்இன்று கடும்வீழ்ச்சியைச்சந்தித்தது. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு சுமார் 6.08 சதவீதம் வரை குறைந்தது.
இதில்ரிலையன்ஸ்நிறுவனத்தின் பங்குகளும்சரிவைச்சந்தித்தன. ஒரு பங்கின் மதிப்பு 1,095 வரை குறைந்தது. இதுவேரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்நிறுவன வரலாற்றில் கடந்த 11 ஆண்டுகளில் மிகக்குறைந்த பங்கு மதிப்பு ஆகும். இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று மதிய நிலவரப்படி சுமார் 40,000 கோடி வரை சரிந்திருக்கலாம்எனக்கணக்கிடப்பட்டுள்ளது. 41.8பில்லியின்டாலராக இருந்த அவரதுசொத்துமதிப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 12.40% குறைந்தது.கரோனாவைரஸ்உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கத்தில்ரிலையன்ஸ்நிறுவனமும் தற்போது சிக்கியுள்ளது.