Skip to main content

ஒரே நாளில் 17,000 கோடி ரூபாயை இழந்த முகேஷ் அம்பானி...

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

சீனா, அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தக போர் காரணமாக ஒரே நாளில் உலக கோடீஸ்வரர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளனர்.

 

mukesh ambani loses 2.4 billion dollars in a single day

 

 

சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில வருடங்களாக கடுமையான வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்புகளை செய்து வருகிறது. இந்த வர்த்தக போர் கடந்த செவ்வாய்கிழமை உச்சகட்டத்தை அடைந்த நிலையில், அமெரிக்க பங்கு சந்தை மற்றும் வணிகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் அமெரிக்க சந்தைகள் மற்றும் வணிகங்களில் முதலீடு செய்திருந்த தொழிலதிபர்களின் பணம் பெருமளவு நஷ்டமடைந்து.

இதில் இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு 2.45 பில்லியன் டாலர் அளவு இழப்பு ஏற்பட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 1,73,51,39,00,000 ரூபாய் ஆகும். இதே போல அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 3.43 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தார். பிரான்சின் எல்விஎம்ஹெச் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 3.25 பில்லியன் டாலர்களை இழந்தார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 2.80 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தார்.

அந்த ஒரு தினத்தில் மட்டும் மொத்தம் 117 பில்லியன் டாலர்களை உலகில் உள்ள தொழிலதிபர்கள் இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் 1 பில்லியன் டாலர்களுக்கு (7000 கோடி ரூபாய்) மேல் நஷ்டமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.