Skip to main content

வாடகை வீட்டில் இருந்து கொண்டு ஓனர் சொல்வதை கேட்பதில்லை; ஆளுநரை விமர்சித்த மதுரை எம்.பி

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

su venkatesan

 

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் நேற்று முன்தினம் மக்களவையில் எதிரொலித்தது. அப்போது, நீட் விலக்கு மசோதா திரும்ப அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பிக்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

அதனைத்தொடர்ந்து நேற்று காலை, மாநிலங்களவை கூடியதும் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள்,  நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி மறுக்க திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதன்தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

இந்தநிலையில் நேற்று மாலை மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக ஆளுநர் ரவி மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்க முயலுவதாகவும், அவரை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி பேசியது வருமாறு; மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள், உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசியிருக்கிறார். அது சார்ந்த என்னுடைய கருத்துக்களை இங்கே முன்வைக்கலாம் என நினைக்கிறேன். நான் வாடகை வீட்டிலேயே குடியிருப்பவன். எனது வீட்டின் உரிமையாளருக்கு உடமைகளும், கடமைகளும் உண்டு. என்னுடைய வீட்டின் நிலமும், கட்டிடமும் அவருக்கு சொந்தமானது. அவரது உரிமையிலே நான் தலையிடுவதில்லை, மதிக்கிறேன். என்னைப்போலவே தமிழ்நாட்டில் ஒருவர் வாடகை வீட்டிலே குடியிருக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியிருக்கிறது. அனால் அவர், தனது உரிமையாளரின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறார். உரிமையாளரின் உரிமையை நிராகரிக்கிறார். உரிமையாளர் கொடுத்த தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். நான் யாரை பற்றிச் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

 

குற்றவாளிகளுடைய தண்டனையைக் குறைக்கவும், ரத்து செய்யவும் அதிகாரம் படைத்த ஒருவர், மக்களாட்சியினுடைய தத்துவத்தை அதிகாரத்தைக் குறைக்கவும், இரத்து செய்யவும் துணிவது ஜனநாயகத்திற்கான அவமானம். ஆறரைக்கோடி தமிழர்களுடைய, தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம் என சொல்லுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. இதே அவையில் நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் எங்கள் குரலுக்கு நீங்கள் செவிபடுப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தினுடைய குரல் ஓயப்போவதில்லை. டிசம்பர் மாதம் காசியிலே பேசிய பிரதமர் அவர்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். "காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. விழிப்புணர்வே அங்கு வாழ்க்கை. அன்பே அங்கு பாரம்பரியம்" என்றார். அவருடைய உரையாவே இந்த அவையில் மீண்டும் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். தமிழகத்தை வெறும் வரைபடத்தை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. மூவாயிரம் ஆண்டு முற்போக்கு சிந்தனையும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதி தத்துவமும் கொண்ட தமிழகத்தினுடைய குரல், மீண்டும் மீண்டும் இந்த அவையிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

 

நான் மீண்டும் இங்கே அழுத்தமாக சொல்லுவது, நாங்கள் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலே கூட  மாநிலத்தினுடைய பிரதிநிதிகள் டெல்லி அதிகாரிகளை பார்க்க 10 நாள் காத்திருந்ததாக கேள்விப்பட்டதில்லை. ஆனால் நாங்கள் காத்திருந்து பார்த்து நீட் தேர்வை இரத்து செய்யகோரிய மசோதாவுக்கான மனுவை கொடுத்தோம். மனுவை கொடுப்பதாலேயே நாங்கள் அதிகாரமற்றவர்களாக, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவதில்லை. ஒன்றியமும் மாநிலமும் சம அதிகாரம் கொண்ட அமைப்புகளென்று அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரலல்ல.  இந்திய மாநிலங்களின் குரல். இந்திய அரசியல் சாசனத்தின் குரல். இந்த குரலுக்கு செவிமடுங்கள். செவிமடுக்க மறுக்கிற நபரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.