Advertisment

இந்தி திரிஷயம் படம் பார்த்து அதே மாதிரி கொலை செய்த இளைஞர்!

சினிமா பாணியில் நண்பனை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் திலீப். இவர் அப்பகுதியில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய நீண்டகால நண்பர் தாக்கூர். இவரும் அதே பகுதியில், உணவு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் திலீப்பின் மனைவிக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது. இது தெரிந்து தாக்கூரை எச்சரித்த தீலிப், தன் வீட்டை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டார். மனைவியும் தாக்கூரை விட்டு விலகுமாறு எச்சரித்துள்ளார்.

Advertisment

இதனால் கோபம் கொண்ட தாக்கூர், நண்பர்கள் இருவரின் உதவியுடன் திலிப்பை கொன்று தன் கடைக்கு பின்புறத்தில் குழிதோண்டி, அதில் 50 கிலோ உப்பு போட்டு அவரை மூடியுள்ளார். பிறகு எந்த சம்பவமும் நடக்காதது போல் தன் கடையில் வேலை செய்துள்ளார். திலீப்பை காணவில்லை என்று அவரது உறவினர்கள் புகார் அளிக்கவே, போலிசார் இவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அவரும் உண்மையை ஒத்துக்கொண்டதால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் இந்தி திரிஷயம் படம் பார்த்து இந்த கொலையை செய்ததாக போலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

murder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe