Advertisment

தாயின் இறுதி ஊர்வலம்; உடலை சுமந்த மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரைப் பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார்.அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

Advertisment

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத்தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று காலை அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள அவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயார் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதிச் சடங்குக்காக அவரது உடலை வாகனம் வரை சுமந்து வந்த மோடி பின்பு அவரது உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்து சென்றார்.

Advertisment

Gujarath modi mother passes away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe