Skip to main content

மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ள விரும்பிய கொடூர தாய்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A mother who wanted to push her daughter into incident in uttarpradesh

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.