Advertisment

மகனை வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாய்...

child abbuse

காஷ்மீரிலுள்ள பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய அச்சிறுமியுடைய தந்தையின் முதல் மனைவி தூண்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாரமுல்லாவில் உரி பகுதியில் வசிக்கும் முஸ்தாக் அஹ்மத் உள்ளுரைச் சேர்ந்த ஃபஹ்மீதா என்ற பெண்ணை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறகு முஸ்தாக் 2008ஆம் ஆண்டு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குஷ்பூ என்ற பெண்ணை மணந்தார், அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Advertisment

முஸ்தாக் இரண்டாவது மனைவியுடனே அதிக நேரம் செலவழித்ததால் ஃபஹ்மீதாவுக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னுடையமகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்ததால், ஃபஹ்மீதாவுக்கும் கணவர் முஸ்தாக் அஹ்மதுக்கும் தினசரி வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் முதல் மனைவியின் கோபம் வெறுப்பாக மாற, கணவனை பழிவாங்க முடிவு செய்துள்ளார் ஃபஹ்மீதா.

இதன்காரணமாக, ஃபஹ்மீதா தன்னுடைய 14வயது சிறுவன் மற்றும் அவனுடைய நண்பர்களை வைத்து 9வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். தாயின் உத்தரவை கேட்டு, அந்த மகனும் அவ்வாறு செய்துள்ளான். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யும்போது அந்த முதல் மனைவியும் அங்கு இருந்து அதை பார்த்து கொண்டிருந்திருக்கிறார்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பிறகு, சிறுமியை கோடாரியால் வெட்டி கொன்றிருக்கிறார்கள். கண்ணை பிடிங்கி அச்சிறுமியின் முகத்தில் அமிலத்தை ஊற்றியிருக்கிறார்கள். பின்னர், சடலத்தை காட்டுப்பகுதியில் தூக்கி வீசியிருக்கிறார்கள். பின்னர் பத்து நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை வைத்து போலிஸ் மேற்கொண்ட விசாரணையில் இத்தகவல்கள் அனைத்தும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Child abuse jammu and kashmir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe