Skip to main content

மீண்டும் லட்சத்தை கடந்து உச்சம் தொட்ட தினசரி கரோனா பாதிப்பு!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி, கரோனா பரவல் குறித்து இன்று (08.04.2021) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

இந்தநிலையில், கடந்த 24மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 685 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்