Skip to main content

2.5 லட்சத்திற்கும் மேல் தொடர் திருட்டு-கொள்ளையன் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

nn

 

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம்  அண்ணா சாலை, நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் உள்ள துணிக்கடை, பாத்திர கடைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர் உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

 

இது தொடர்பாக அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் பெரிய கடை மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையங்களில் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேலாக திருட்டப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக இரு காவல் நிலைய போலீசாரும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரங்களில் பை மாட்டிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அந்தந்த கடைகளுக்கு அருகே செல்வது தெரியவந்தது. அதையடுத்து அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் பொள்ளாச்சி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஜஸ்டின் சுந்தர் (38) என்பதும், இவர் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இதே போல் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

bb

 

இவர் தற்போது கன்னியாகுமரியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அதனைத்  தொடர்ந்து இவரை போலீசார் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அண்ணாசாலையில் கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை ஒதியஞ்சாலை காவல் நிலைய ரோந்து போலீசார் பிடித்து சோதனை செய்ததனர். அவர் பையில் சுத்தி, கொறடா மற்றும் சில சாவிகள் இருப்பதைக் கண்டு அவரை காவல் நிலையம்  அழைத்துச் சென்று  சி.சி.டி.வி காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஜஸ்டின் சுந்தர் என்பது தெரியவந்தது. அதனால் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரை இரு காவல் நிலைய போலீசாரும் ஒரிரு நாட்களில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சுந்தரை தமிழக போலீசாரும் தேடி வரும் நிலையில், அவர்களும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முயல்வதாகவும் புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.