Skip to main content

காஷ்மீரை அரசியலுக்குப் பயன்படுத்தும் மோடி ஹரியானா, மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு ஏதாச்சும் செய்திருக்கிறாரா? காங்கிரஸ் கேள்வி!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

காஷ்மீர் வளர்ச்சிக்காகவே சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் 370ஆவது பிரிவை நீக்கியதாக தேர்தல் அரசியல் செய்யும் மோடி, அரசியல் சட்டம் 47 ஆவது பிரிவு சொல்வதை சரியாக செய்திருக்கிறாரா? அதைச் சரியாக செய்திருந்தால் 93 சதவீதம் குழந்தைகள் சத்துணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்குமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் காட்டமாக கேட்டிருக்கிறார்.

 

Modi's use of Kashmir for politics: Has helped Haryana Maharashtra grow? Question of Congress!

 

ஹரியானா தேர்தலுக்காக ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து குறித்து மோடி பேசுகிறார். ஆனால், பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த காஷ்மீரை பிரித்து இந்தியாவுடன் சேர்த்தது காங்கிரஸ்தான் என்ற உண்மையை சொல்வாரா? காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது மோடி எங்கே இருந்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது காங்கிரஸ்தான் என்ற உண்மையை சொல்லும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா?

காஷ்மீர் வளர்ச்சிக்காகவே 370 ஆவது பிரிவை நீக்கியதாக சொல்லும் மோடி, அரசியல் சட்டம் 47 ஆவது பிரிவு என்ன சொல்கிறது என்பதை அறிவாரா? அந்தப் பிரிவு மாநிலங்களில் வசிக்கும் மக்களின் பொது சுகாதார வசதிகளையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதும் சத்துணவு வினியோகத்தை அதிகரிப்பதையும் மத்திய அரசு முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று சொல்கிறது.

இதை ஒழுங்காக நிர்வகித்திருந்தால் 93 சதவீதம் குழந்தைகள் சத்துணவுக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்காது. மோடிக்கு தெரிந்ததெல்லாம் 370 மட்டும்தான். 47 ஆவது பிரிவு என்னவென்று தெரியாது.

ஹரியானா, மகாராஸ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பிரசவத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம், வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பதையும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்திருப்பதையும், மனிதவள மேம்பாடு புள்ளிவிவரம் குறைந்திருப்பதையும் மறைக்க காஷ்மீரை பயன்படுத்துகிறார் மோடி என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் கபில் சிபல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.