Skip to main content

மோடியின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை திடீர் சரிவு... ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கை!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

twitter

 

 

 

 

ட்விட்டரில் அதிகமாக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும்  இந்தியர்களில் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் இரண்டே நாளில் அவருடைய அக்கவுண்டில் இருந்து  2,70,000 ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர்.

 

11 ஜூலை அன்று நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கில் 43.37 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருந்தனர். தற்போது அது 43.1 மில்லியனாக இருக்கிறது. அதேபோல இந்திய பிரதமருக்கு என்று ட்விட்டரில் ஒரு கணக்கு இருக்கிறது. அதிலும் ஒரு லட்சம் பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். 

 

 

 

 

உலகிலேயே பிரபலங்களின் சாய்ஸ்சாக சமூக வலைதளத்தில் இருப்பது  ட்விட்டர் தான். அப்படிப்பட்ட ட்விட்டரில், பிரபலங்களின் பேரில் பல கள்ள அக்கவுண்ட்கள் செயல்படுகின்றன. ஆகையால், இந்த நிறுவனம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் செயல்படும் கள்ள அக்கவுண்ட்களை செயல் இழக்க செய்தது. அதனால், இந்தியாவின் பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் குறைந்திருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது அதிக ஃபாலோவர்ஸை கொண்ட அமிதாப் பச்சன், அவருடைய  அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இவர்களி போன்று ராகுல் காந்தி, சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், அமீர் கான் என்று பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் அதிக அளவில் குறைந்திருக்கிறது.                        

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.