Skip to main content

கேரள பாஜக தலைவர்களை எச்சரித்த மோடி! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Modi warns Kerala BJP leaders
                                                       சுரேந்திரன்
​​​​​

கேரளாவிலும் சட்டசபைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், அங்கு உள்ளாட்சித் தோ்தலில் கடும் தோல்வியைச் சந்தித்த பாஜக, ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு எதிராக வியூகம் அமைத்து வருகிறது. தோ்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களின் சாதாரண பிரச்சினையைக் கூட பெரிதாக்கும் விதத்தில் மாவட்டம் தோறும் போராட்டங்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களை நடத்திவருகிறது பாஜக.

 

ஆனால், போராட்டங்களை விட பாஜகவின் கோஷ்டி பூசல் உயா்ந்து நிற்பதால் தொண்டா்களும் டெல்லி தலைமையும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரள பாஜக மாநிலத் தலைவா் சுரேந்திரன், துணைத்தலைவா் ஷோபா, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் தலைவா்கள் கிருஷ்ணதாஸ், கும்மனம் ராஜசேகரன், எம்.டி.ரமேஷ் மற்றும் மாநிலச் செயலாளா் சுரேஷ் எனப் பல கோஷ்டிகள் உள்ளன. இவா்களோடு, மிசோரம் மாநில கவா்னரும் கேரள பாஜக முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பினரும் ஓரு அணியாக உள்ளனா். இதில் சுரேந்திரன் தலைவரான ஆரம்பத்தில் இருந்தே நேரடியாகக் கோஷ்டியைக் களத்தில் காட்டுபவா் ஷோபா தான்.

 

அது கட்சி அலுவலகமாக இருந்தாலும், பொது இடமாக இருந்தாலும் நேரடியாகவே ஒருவருக்கொருவா் வாய்ப் பேச்சில் மோதிக் கொள்வார்கள். போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் கூட இரு அணியும் தனித் தனியாகவே நிற்பார்கள். மத்திய மந்திரியான முரளிதரன் கோஷ்டி, சில நேரங்களில் மாநிலத் தலைவா் சுரேந்திரன் கோஷ்டியுடன் ஒத்துப்போகும். அதே போல் மிசோரம் கவா்னா் ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பின் ஆதரவு சில நேரங்களில் ஷோபாவுக்கும் உண்டு. அதேபோல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் முக்கிய நிர்வாகி முகுந்தனின் ஆதரவும் ஷோபாவுக்கு உள்ளது. இதனால், ஷோபா சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனே டெல்லி தலைமைக்குக் கொண்டு போய்விடுவார். இது மாநிலத் தலைவா் சுரேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Modi warns Kerala BJP leaders
                                                              ஷோபா


உள்ளாட்சித் தோ்தலின் தோல்விக்குக் காரணம் பாஜக தலைவா் சுரேந்திரனின் தவறான நடவடிக்கைகளும், முடிவுகளும் தான் என்றும் சொந்த மாவட்டத்தில் கூட ஒரு நகராட்சியைக் கூட பிடிக்க முடியவில்லை என்றும் முதலில் வாய்த் திறந்து குற்றம் சாட்டிய ஷோபாவின் பேச்சு, சுரேந்திரனுக்கு எரிச்சலை உருவாக்கியது. இந்த நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தகுதியானவா்களுக்கு வேலை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தகுதியற்றவா்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி இளைஞா்களும் காங்கிரசாரும் தலைமைச் செயலகம் முன் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதில், ஷோபாவும் அந்த இளைஞா்களுக்கு ஆதரவாக தொடா் உண்ணாவிரதம் நடத்தினா். அதற்கு பாஜக தலைமையும் பாஜக’வின் இளைஞா் அமைப்பும் ஆதரவு கொடுக்கவில்லை.

 

இது ஷோபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சென்ற ஷோபாவும், சுரேந்திரனும் மாறி மாறி புகார்களை மோடி, அமித்ஷா, நட்டாவிடம் அள்ளி வீசினார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொச்சிவந்த மோடி, கோஷ்டியினா் எல்லாரையும் நேரில் அழைத்து எச்சரித்ததோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில், கேரளாவில் ஓரே ஓரு எம்எல்ஏவோடு இருக்கும் பாஜக இத்தனை கோஷ்டிகளை சமாளித்து எப்படித் தோ்தல் இலக்கை அடையப் போகிறதோ? இந்நிலையில் 'மெட்ரோ மேன்' எனக் கூறப்படும் ஸ்ரீதரன், “நான் பாஜகவில் சேரப் போகிறேன். கேரளாவில் முதல்வா் ஆவது தான் எனது கனவு” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கிற கோஷ்டி போதாது என்று அடுத்து இன்னொரு கோஷ்டியா? எனத் தலையில் அடித்துக் கொல்கிறார்கள் பாஜகவினா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.