தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்று தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். அதனையடுத்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதிக்கு இன்று சென்றுள்ளார்.
இன்று காலை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். மோடி கோவிலுக்கு சென்றபோது அவருடன் அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடனிருந்தனர். கோவிலில் பூஜைகளை முடித்த மோடி வாரணாசி தொகுதி மக்களையும் சந்தித்து நன்றி கூற உள்ளார்.